Saturday, April 23, 2016

குடும்ப பெண்களுக்கு ஏன் செக்ஸ் ஆசை அதிகம் தெரியுமா..??

குடும்ப பெண்களுக்கு ஏன் செக்ஸ் ஆசை அதிகம் தெரியுமா..??
வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி. 20 + வயது… இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். பெண்களில் பலருக்கு செக்ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடிக்கடி வருமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம். இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம்.

அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம். 20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி. 30 + வயது… 30 வயதில் வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம்.

பூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலிடங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம். இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள்வது, பாத் டப்பில் வைத்துக் கொள்வது என்று வித்தியாசமாகவும் திங் பண்ணுவார்களாம். அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் இந்த வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம். பல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம். அதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம்.

குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். 30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாம். 40 + வயது… 40 வயதைத் தாண்டிய பெரும்பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மேலும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம் ஆண்கள். பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம்.

தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம். மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம். டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.
script javascript="" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js type=" text="">

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2016 iPRESS. All rights resevered. Designed by Templateism